Tuesday, April 14, 2009

மெய்பக்தி

தாய் சேய் செய்யும் பிழையினை கணபொழுதில் மறந்து மன்னிக்கும் குணமுடையராக யிருத்தலியல்பு. தாயுமானாவரோ சகலரர்க்கும் மூலமாதலால் தன் பக்தர்கள் அறிந்தோ, அறியாமலோ, ஆணவமருளினாலோ செய்யுந் தவறினைப் பொருத்து, மன்னித்தருளுவதில் நிகரில்லாதவர். அதனாலன்றோ தாயினுஞ் சாலபரிந்தென்று இறைஞ்சுகிறார் மாணிக்கவாசகர்.

சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே. அசுரர்களும், தேவர்களும் பகைவராயினுங் சிவவழிபாடுகளினாலே வான்முட்ட புகழ்பெற்றனர். இதை வலியுறுத்துவனவாகக் கூறப்படும் பக்திநெறிக் கதைகளுளொன்று வேடுவர் கண்ணப்பனின் கதை.

வேட்டையாடிய விலங்கின் புலாலையே உணவாக யுட்கொள்ளுமவன், பசியாறுவதற்கு முன் உணவினொரு பங்கினை தான் வேட்டையாடும் கானகத்தின் குடிகொண்டிருக்கும் ஆதிசிவலிங்கத்திற்கு படைக்குங் பழக்கமுடையவனாக யிருந்தான். வேட்டையாடிய பன்றியின் புலாலை முதலில் தான் சுவைத்துப் பார்த்த பின், சுவைமிகு துண்டுகளை மட்டும் படையலாக சிவலிங்க ஆவுடையிற் மீது பரப்பிய பிறகு, எஞ்சியத் துண்டுகளைக் கொண்டு தன் பசியாற்றுவான். இதையையே வழக்கமாகவும் கொண்டான்.

மறுபுறமோ பசுங் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்குங் மணங்கமழ வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னை யர்பணித்தக் கொண்டவராக திகழ்ந்தார் பூசர்.

சாத்திரங் கற்ற பூசரும், வேடுவரும் அடிப்படையிற் இருவேறு துருவங்களையாயினுங் தத்தம் பக்தியில் மெய்யன்புக் கொண்டவர்கள். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட பூசர் கடுஞ்சினங் கொண்டார். நித்தமும் நித்திரையின்றி மனவேதனைப் பட்டார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார். அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். பூசரின் மனகவலைப் போக்க இறையனார் கனவிற் தோன்றி, இன்றிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார். அங்ஙனமே அவரும் ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறியது.

கண்ணப்பன் அன்றிரவு கண்ணப்பனும் நேரத்துடன் வேட்டை விலங்கினைத் தோளிற் தூக்கியபடி சிவனாரருகே வந்தான். நீவிர் புசிப்பதற்கு இதோ இளமானின் புலாலென வழக்கம் போல் படையலிட்டான் கண்ணப்பன். அக்கணம் சிவனாரின் இடக்கண்ணிற் குருதி வழியத் தொடங்கியது. குருதியினை கரத்தினால் துடைத்தும் கசிவது நிற்கவில்லை. சிவன் கண்ணில் புண், கண்டுங் காணாமற் யிருக்கலாகுமோ யெனக் கூறி, அம்பின் கூர்முனையாற் தன்னிடக் கண்ணைக் குற்றிப் பெயர்த்தெடுத்து புண்கண்ணில் பொருத்தினான். உனக்கின்றி எனக்கேன் யிருக்கண் யென்று மொழிந்தான். மறைந்திருந்த பூசரோ கண்டது கனவோ நனவோயென யறியாமற் திகைத்து நின்றார்.

இடக்கண்ணி்ற் நிற்கவே வலக்கண்ணி்ற் வழியாரம்பித்தது குருதி. ஐயகோ யென்செய்வேன் வலக்கண்ணையுங் பெயர்த்தெடுத்தால் வலப்புண் கண்ணை யெங்ஙன மறிவேன் யெனக் கூறினான் கண்ணப்பன். சற்றுஞ் சிந்தியாது வலக்காலை புண்கண்ணிற் மிதியவே, அம்பினாற் வலக்கண்ணேப் பெயர்க்க துணியவே, சிவனார் கண்ணப்பநாயனாரைத் தடுத்தருளினார். கண்ணப்பர் சிவனாருளால் யிருக்கண்ணையும் திரும்பப் பெற, பூசர் சிவவாக்கின்படி நடந்தவற்றை ஊராரிடங் கூற, கண்ணப்பரின் புகழ் உலகமெங்கும் பரவியது.

இனிதே முடிவுற்ற திருவிளையாடற் காட்சிச் சொல்ல விளைவது யாதெனில், எச்சிலிட்ட புலால் படைத்தல், செருப்பணிக் காலால் மீதித்தல் முதலியன தீச்செயலையாயினுங் திருக்கண்ணிற் குருதி தென்பட்டமாத்திரமே, தன்னிரு கண்ணையும் பெயர்த்தெடுத்து உறுப்புதானம் செய்திட்ட, இருப்பதனை யிழக்க முனைந்திட்ட துணிவே மெய்பக்தி யெனக் கொள்க.

Wednesday, April 1, 2009

பிரதோஷம்

சிவனாரின் திருக்கண்ணிற் குருதி தென்பட்டமாத்திரமே, தன்னிருகண்ணையும் பெயர்த்தெடுத்து உறுப்புதானம் செய்திட துணிந்த கண்ணப்பநாயனார் அறியாமையாற் பன்றியின் புலாலை ஈசனுக்குப் படைத்திருந்தாலும், அவனது ஒப்பற்ற சிவபக்தியினை மட்டுமே கண்டு மனங்குளிர்ந்திட்ட பரமன் அதனை உலகமறிய செய்தார் ஊரார் திகைக்கும் வண்ணம்.  

மானிடர்கள் மட்டுமல்லாமற் பட்சிகள் தொடங்கி முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன் தேவேந்திரன் வரையிலாக அனைவரும் சிவவழிபாடினாலே மங்கா புகழ் எய்துள்ளனர். இத்தகைய சிறப்பிற்குரிய சிவவழிபாடுகளில் தலையாயதென சித்தர் பெருமக்களால் போற்றப்படும் பிரதோஷ வழிபாட்டு தோன்றலின் கரணியத்தை யிங்கு காண்போம்.

துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் செல்வங்களை யிழந்த இந்திரன், தேவகுருவின் ஆலோசனையின்படி பாற்கடலைக் கடைந்து ஐராவதம், பரிவாரம் முதலிய செல்வங்களை மீட்க திட்டமிட்டான். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென யறிந்த தேவேந்திரன், தனது குல எதிரியென்றும் பாராமற் அசுர பலத்தையும் நாடினான். பாற்கடலை கடையத் துணைப்புரிவதாற் என்றும் மரணயெய்யா நிலைதர வல்ல அமிழ்தத்தில் தனக்கொர் பங்கு கிடைக்குமென எண்ணி ஒப்புகொண்டனர் அசுரர்கள்.

பாற்கடலில் பள்ளிகொணடருளும் நாராயணனார் தனது இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரமெடுக்க தருணம் வந்ததையறிந்து தேவேந்திரனுக்கு உதவிட எழுந்தருளினார். வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தர மலையை மத்தாக்கி, மலை கடலிலமிழா வண்ணம் கூர்மவதார கடவுள் தாங்கியபடி, தேவர்களும் அசுரர்களும் கடைய முற்பட்டனர். ஆனால் மலைமத்தோ அசைவேணாவென்று அடம்பிடித்தது.

இன்னும் பலவான்கள் தேவையெனயறிந்த இந்திரன், இராவணினிடமே மல்யுத்தம் செய்த சக்திசாலிகளாகிய ஆயிரங்கரங்களையுடைய கார்த்தவீரியார்ஜுனன் மற்றும் வானர வேந்தன் வாலியின் உதவியை நாடினான். அசுரர்களுடன் கார்த்தவீரியார்ஜுனன் பாம்பின் தலையினருகே  சேர,  தேவர்களுடன் வாலி பாம்பின் வாலினருகே சேர்ந்து மந்தர மலையை அப்படியும் இப்படியுமாக இழுத்துக் கடலை இனிதே கடைய யாரம்பித்தனர்.

சாகானிலை தரவல்ல அமிழ்ததின்பாற் கொண்டபற்றினாற் கடைவதை தீவிரபடுத்த, அமிழ்த்தின் வரவை எதிர்நோக்கிட்ட வேளையிற், அவர்க்கெல்லாம் பேரிடியாக கருகருவென விரீயத்துடந் வானலாவ திரண்டு நின்றது ஆலகாலம் எனுந்விடமே. இக்கொடியவிடத்திற் மேலுந் வலுசேர்த்தாற் போல் வாசுகி வலிபொருக்க முடியாமற் நஞ்சினை கக்கியது.  கிணறு வெட்ட பூதம் கிழம்பினாற் போல்,  சற்றும் எதிர்பாராமற் தலைப்பட்ட பேராபத்தினால், சித்தம் கலங்கிட, சிந்தை தடுமாறிட, மரணஓலம் கேட்டிட, கை காலெல்லாம் உதறிட, செய்வதறியாமற் பாலகர் போல் தன்னிலை யெண்ணி மனந்நொந்து கண்ணீர் மல்கினர்.

மரணப்பயங் கொண்ட நெஞ்சினுள் சங்கரன் நினைவு இருளைக் கிழித்துத் தென்படுந் ஒளியினைப் போல்லெழ, சதாசிவா!!! சங்கரா!!! அபயமென அலறி, பாற்கடலினிருந்து கயிலைநாதனின் திருவடியிற் தஞ்சம் புக கயிலைமலைக்கு விரைந்தனர்.

ஆலகாலமோ இவர்கள் செல்லும் வழிநெடுக்க தொடர்ந்துவர, தப்பித்தோம் பிழைத்தோமென மரணோலத்துடன் நந்தியம்பதியின் இருப்பிடத்திற்கு வந்தனர். விடயமறிந்த நந்தியோ அபயமருள பரம்பொருளிந் கடைக்கண்பட அவ்வனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

சேதியறிந்து திகைத்தனர் அங்கிருந்தோர். எப்பணி தொடங்கினும் சிவனருளைப் பெறுந் அந்நெறியினை மறந்த கரணித்தினாலேயே இவ்வபாயத்தில் சிக்கிவிட்டோமென பரம்பொருளின் திருவடியில் சரணடைந்தனர் ஓடிவந்தோர்.

மறுமொழியேதுங் கூறாமற் நாடிவந்தோர் உயிர்காக்க அபயந் தந்தருள மனமிறங்கினார் ஒப்பாரும் மிக்காருமில்லா சிவபெருமான். இந்நிலையில் கடைந்தோரின் உயிரைக்கவர காலனாக கயிலைக்கே வந்தது அவ்வாலகாலம்.

மலைமகள் பதற, அவள் தமையனார் தோள் நடுங்க, சிவனார் முனெதிர்பட்டது அக்கொடியவிடம். நெறிமறந்தாற் துன்பம் அவர்தம் செய்வினையாயினுந், தவறை யொப்புக்கொண்டு சரணடைந்தோர் இன்னல் போக்க, சித்தர்கள் கூடியிருக்குமந்த கயிலைமலையில், சிவகணங்கள்  அஞ்சிய அக்கொடிய ஆலகாலவிடத்தை தன்னிருக் கரங்களால் ஒன்றுத்திரட்டி உருண்டையாக்கி வாயிற்யிட்டு விழுங்கலானார் அம்மாசறுகோன்.

kmalarnews_83819216490 எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் யுடலிற் நஞ்சு சேர்ந்தால் சகல யுயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சிய உமையும், பரந்தாமனும் ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை யிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் சிவனார் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.

இச்சம்பவந் நடக்கின்ற காலநேரத்தே பிரதோஷ காலமென்றனர். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம்.  சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.

இவ்வாறு கயிலையில் சகல தேவ அசுர புடைசுல அபயந்தேடி ஒன்றாகக் கூடியிருக்கின்ற வேளையில் நாமும் கோயினுளிருக்க வரவிருக்கின்ற அபாயம் ஆலாமேயாயினுங் ஈசனின் திருவருளால் மறைந்துப் போகுமென்பது உறுதி.

Thursday, October 9, 2008

உலகெலாம்...

சிவாசகல உயிர்களும் தத்தம் பணிகளின் மூலம் இவ்வுலகயியக்கத்திற்குப் பங்களிக்கின்றன. அவ்வகையில் நானும் தமிழாக்கம், இணையேற்றம் இவ்விரண்டையும் இறைவன் எனக்களித்த பணிகளாக ஏற்று,  அதை செவ்வனே செய்திட அவன் தாள் வணங்கி, இனிதே தொடங்குகின்றேன். 

ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறு பிணி வரத்தாம் அஞ்சும் !!! திருச்சிற்றம்பலம் !!!